தேவையான பொருட்கள்
இட்லி அரிசி - ஒரு கப்
பச்சரிசி - அரை கப்
கருப்பு உளுந்து உடைத்தது - கால் கப்
மிளகுத்தூள் - மூன்று டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்
கருவேப்பிலை - 20 இலைகள்
தேங்காய் துருவல் - ஒரு கப்
தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
இட்லி அரிசி, பச்சரிசி மற்றும் கருப்பு உளுந்தம் பருப்பை அளந்து எடுத்துக் கொள்ளவும் .
ஒரு பாத்திரத்தில் அரிசி மற்றும் உளுந்தை சேர்த்து கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் தண்ணீரை வடிகட்டவும்.
மிக்ஸி ஜாரில் வடிகட்டி அரிசி மற்றும் உளுந்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும் .
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்ற வேண்டும் .
ஒன்றரை கப் தண்ணீர் விட்டு கலக்கவும் .
அரைத்த மாவில் உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, தேங்காய் துருவல் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
தோசை கல் சூடானதும் ஒன்றரை கரண்டி மாவை எடுத்து தோசை போல் இடவும் .
தேங்காய் எண்ணெயை சுற்றி விடவும்.
அடை பொன்னிறமாக மாறியதும் திருப்பி போட்டு ஒரு நிமிடம் நன்கு முறுகியதும் எடுக்கவும்.