தேவையானவை
குட்டை புடலை நறுக்கியது - ஒரு கப்
தேங்காய் பால் - இரண்டு கப்
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
தாளிக்க
தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - ஒன்று
கடுகு கருவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
நறுக்கிய புடலங்காயை உப்பு சேர்த்து வேகவிட்டு தேங்காய் பால் சேர்த்து இறக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து சேர்க்கவும் .
பிறகு இதனுடன் சர்க்கரை சேர்த்து பரிமாறவும்.
குறிப்பு தேங்காய் பால் சேர்த்துள்ளதால் விரைவில் சாப்பிட்டு விட வேண்டும்.
மிச்சம் வைத்து உண்ணக்கூடாது.
தேங்காய் பாலுக்கு குடல், தொண்டை புண்ணை ஆற்றும் சக்தி உண்டு.