தேவையான பொருட்கள்
பச்சரிசி , புழுங்கல் அரிசி , புளித்த தயிர் தலா - 100 கிராம்
அவல் - 50 கிராம்
உப்பு - சிறிதளவு
செய்முறை
இரண்டு வகை அரிசியையும் ஒன்றாக நனைய வைக்க வேண்டும்.
இரண்டு மணி நேரம் ஊற வைத்து நீரை வடித்து அரிசியை அரைத்து அவலையும் சேர்த்து அரைத்து தோசை மாவு பக்குவத்தில் தயிர் கலந்து வைக்க வேண்டும்.
மறுநாள் தோசை கல்லை அடுப்பில் போட்டு ஒரு கரண்டி மாவை ஊற்றி எண்ணெய் ஊற்றி தோசையாக வெந்ததும் எடுக்க வேண்டும்.