தேவையானவை
மைதா மாவு - கால் கிலோ
புளித்த தயிர் - 200 கிராம்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறு துண்டு
மிளகு, சீரகம் - ஒரு டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயம் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு ஏற்ப
சோடா மாவு - அரை சிட்டிகை
எண்ணெய் - பொரித்தெடுக்க
பக்குவம்
ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, சீரகம், கருவேப்பிலை, பெருங்காயம், உப்பு, சோடா மாவு, பெருங்காயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் .
அதில் தயிர் சேர்த்து நன்றாக ஐந்து நிமிடம் கைப்படாமல் கரண்டியால் பிசைந்து கொள்ளவும்.
தனியாக மாவை 15 நிமிடம் ஊற வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறு உருண்டைகளாக உருட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான போண்டா ரெடி.