தேவையானவை
கைக்குத்தல் அரிசி - அரை கிலோ
கருங்குறவை - அரிசி அரை கிலோ
பார்லி - 200 கிராம்
உதிர்த்த புதிய தேங்காய் - 2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு ஏற்ப
தண்ணீர் - மூன்று முதல் நான்கு கப்
செய்முறை
முதலில் கருங்குறவை அரிசியை ஓடும் நீரில் சுத்தம் செய்து ஒரு நாள் முழுவதும் உலர வைக்கவும்.
இரண்டாவதாக பார்லியையும் உலர்த்தவும் .
அவற்றை ஒன்றாக நொய் பதத்தில் அரைக்கவும் .
அரிசியை பொடியாக அரைக்கக்கூடாது.
இது நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை நன்றாக இருக்கும்.
கஞ்சி தயாரித்தல் முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
மேலே செய்த கஞ்சி கலவையில் ஒன்று அல்லது இரண்டு கப் சேர்க்கவும்.
அவற்றை கலந்து அரிசியை சமைக்கவும் .
மேலும் தண்ணீர் சேர்த்து சுவைக்கு உப்பு சேர்க்கவும் .
நன்கு கலந்து சூடாக பரிமாறவும்.