தேவையானவை
பாசிப்பருப்பு - ஒரு கப்
தனியா - ரெண்டு டீஸ்பூன்
சோப்பு - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும் .
தனியா, சோம்பு இரண்டையும் ஒன்றாக பாெடிக்கவும்.
பாசிப்பருப்பை தண்ணீர் வடித்து சற்று கரகரப்பாக அரைக்கவும் .
எண்ணெயை தவிர மற்ற பொருட்களை எல்லாம் ஒன்றாக கலந்து காய்ந்த எண்ணெயில் சிறு சிறு உருட்டைகளாக போட்டு வேக விட்டு எடுக்கவும் .
இது வட இந்தியாவில் ஃபேவரட் பக்கோடா.
இதற்கு தொட்டுக்கொள்ள பச்சை பட்டாணி, இனிப்பு சட்னி நல்ல சைடிஸ்.