தேவையானவை
உளுந்து - ஒரு கப்
பச்சரிசி - ஒரு ஸ்பூன்
இஞ்சி - 1
வெங்காயம் - ஒன்னு
பச்சை மிளகாய் - இரண்டு
பெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
உளுந்து மற்றும் பச்சரிசியை நான்கு மணி நேரம் ஊற வைத்து அதனுடன் இஞ்சி, உப்பு ஆகியவை போட்டு சிறிது நீர் தெளித்து அரைக்கவும்.
அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயத்தூள் ஆகியவை போட்டு கலக்கவும்.
சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.