தேவையான பொருட்கள்
முலாபழம் - நடுத்தர அளவு ஒன்று
எலுமிச்சம் பழச்சாறு - ஒரு மேசைக்கரண்டி
தண்ணீர் - ஒரு கப்
சர்க்கரை - அரைக்கப்
ஐஸ் கட்டிகள் - எட்டு
செய்முறை
முலாம் பழத்தை சுத்தம் செய்து அதன் மேல் தோல் மற்றும் விதைகளை நீக்கி முழுவதுமாக நறுக்கிக் கொள்ளவும்.
சர்க்கரையை சிறிது தண்ணீர் சேர்த்து பாகு பதத்தில் காய்ச்சி ஆற வைக்கவும் .
நறுக்கிய முலா பழம் , எலுமிச்சை பழச்சாறு , சர்க்கரை பாகு ஆகிவற்றை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும் .
அரைத்த கலவையை காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் போட்டு நன்றாக மூடி பிரீஜரில் வைக்கவும் .
பின்னர் அந்த முலாம்பழம் கலவையை அழகான பவுலில் போட்டு அதன் மேல் தேர் ஊற்றி அலங்கரித்து பரிமாறவும்.