தேவையான பொருட்கள்
காய்ந்த மிளகாய் - 15
புளி - சிறிய எலுமிச்சை அளவு
கடுகு - தேவையான அளவு
உளுந்தம் பருப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - தேவையான அளவு
கருவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு
எண்ணெய் - சிறிதளவு
உப்பு - சிறிதளவு
செய்முறை
வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, மிளகாயை நிறம் மாறாமல் வறுக்கவும் .
அடுப்பை அணைத்து விட்டு புளி, உப்பு சேர்த்து வறுக்கவும்.
இவற்றை ஆறவிட்டு நைசாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து அரைத்து வைத்திருக்கும் சட்னியில் சேர்க்கவும்.