பன்னீர் பராத்தா

kuttybabuPPT
0
பன்னீர் பராத்தா

தேவையானவை 

பன்னீர் துருவியது - ஒரு கப் 

 அம்சூர் பவுடர் - ஒரு டீஸ்பூன்

 பச்சை மிளகாய் நறுக்கியது - 4 

இஞ்சி துருவல் - ஒரு டீஸ்பூன்

 நறுக்கிய கொத்தமல்லி -  நான்கு டேபிள் ஸ்பூன் 

கரம் மசாலா தூள் -  ஒரு டீஸ்பூன்

 மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்

 கோதுமை மாவு - இரண்டு கப் 

ஓமம் - ஒரு டீஸ்பூன்

 உப்பு எண்ணெய் - தேவையான அளவு

  செய்முறை

கோதுமை மாவுடன் சிறிதளவு உப்பு, ஓமம், ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிசறி தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும் .

துருவிய பன்னீர் ,இஞ்சி துருவல், அம்சூர் பவுடர், உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய் , மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி சேர்த்து நன்கு கலக்கவும் .

மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாதியாக தேய்க்கவும்.
 அது லேசாக எண்ணெய் தடவி பன்னீர் கலவையை நடுவில் வைத்து மூடி மீண்டும் தேய்த்து சூடான தவாவில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுத்தால் பன்னீர் பராத்தா தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)