தேவையான பொருட்கள்
தாமரை விதை - 100 கிராம்
இளநீர் - 200 மில்லி லிட்டர்
தேங்காய் பால் - ஒரு கப்
முந்திரி - பத்து
சாரப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
திராட்சை - 10
ஏலக்காய் பொடி - அரை டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
நாட்டு சர்க்கரை - 150 கிராம்
செய்முறை
தாமரை விதையை நெய் ஊற்றி வறுத்துக்கொள்ளவும் .
ஆறியதும் அதில் சிறிது எடுத்து மிக்ஸியில் பொடியாக அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அரைத்த பொடியை 10 நிமிடம் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும் .
அதில் தேங்காய் பால், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும் .
நாட்டு சர்க்கரை கரைந்ததும் இளநீரில் வழுக்கை தேங்காய் இருந்தால் அதையும் சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம் .
பிறகு வாணலியில் நெய் ஊற்றி முந்திரி , சாரப்பருப்பு , திராட்சை தாளித்து சேர்க்கவும்.
மீதமிருக்கும் தாமரை விதையை முழுதாக சேர்க்கவும் .
சுவையான தாமரை விதை இளநீர் பாயாசம் தயார்.