தேவையானவை
தேங்காய் - ஒன்று
பீன்ஸ் - 5
கேரட் - ஒன்று
உருளைக்கிழங்கு - ஒன்று
முருங்கைக்காய் - ஒன்று
எலுமிச்சை - ஒன்று
உப்பு - தேவைக்கு ஏற்ப
அரைத்துக் கொள்ள
பெரிய வெங்காயம் - ஒன்று
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய் - மூணு
சீரகம் - ஒரு டீஸ்பூன்
வேக வைக்க
பாசிப்பருப்பு - 20 கிராம்
தாளிக்க
கடுகு - ஒரு டீஸ்பூன்
உளுந்து - 2 ஸ்பூன்
கருவேப்பிலை - ஒரு ஆர்க்கு
பெருங்காயம் - சிறிது
தேங்காய் எண்ணெய் - 3 ஸ்பூன்
செய்முறை
தேங்காய் துருவலை அரைத்து வடிகட்டி பால் எடுக்கவும் .
முதல் பாலை தனியாக எடுத்து வைக்கவும்.
மீதமுள்ள விழுதில் நீர் ஊற்றி அரைத்து இரண்டு மற்றும் மூன்றாம் பாலையும் எடுக்கவும்.
பீன்ஸை சிறிது நீளமாகவும் , கேரட்டை வட்டமாகவும் நறுக்கவும்.
உருளை, முருங்கை , பீன்ஸ் போல நறுக்கவும்.
வாய் அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நீளமாக நறுக்கிய வெங்காயம் காய்கறிகளையும் சேர்த்து வதக்கி அதனுடன் மூன்றாவது தேங்காய்ப்பாலை சேர்த்து வேக விடவும் .
காய் நன்றாக வெந்தவுடன் அதில் இரண்டாம் பாலை ஊற்றி வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம் ஆகிய அரைத்த விழுதை சேர்க்கவும்.
பிறகு உப்பு சேர்க்கவும்.
கொதித்து பிறகு வேகவைத்த பால் சேர்க்கவும்.
கடுகு, உளுந்து, கருவேப்பிலை, பெருங்காயம் தாளித்து விடவும் .
ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.
நன்கு ஆறிய பிறகு எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும்.