தேவையானவை
பச்சரிசி - 100 கிராம்
புழுங்கல் அரிசி - 50 கிராம்
கேரட் - 100 கிராம்
சீரகம் - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - 100 கிராம்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
இருவகை அரிசியையும் ஒன்றாக இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
மற்ற பொருள்களை அரைத்து சேர்க்க வேண்டும்.
தேவையான தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து கரைக்க வேண்டும் .
தோசை கல்லில் போட்டு அதில் முதலில் எண்ணெய் ஊற்றி ஊத்தாப்பம் மாதிரி ஊற்றி கொள்ள வேண்டும் .
அதில் துருவிய கேரட் ,பொடியாக நறுக்கிய வெங்காயம் , கொஞ்சம் கொத்தமல்லி தலையை வதக்கி மாவு மேலே போட்டு நன்றாக வேகவிட்டு திருப்பி போட வேண்டும்.