சோயா பிரியாணி

kuttybabuPPT
0
சோயா பிரியாணி 

தேவையானவை 

பாஸ்மதி அரிசி - இரண்டு கப் 

சோயா உருண்டைகள் - 15 

பெரிய வெங்காயம் - 3 

தக்காளி - 3 

பச்சை மிளகாய் - ஒன்று

 இஞ்சி - ஒரு துண்டு 

பூண்டு - ஐந்து அல்லது ஆறு பற்கள்

 புதினா - அரை கட்டு

 பூண்டு, மல்லித்தளை - கால் கட்டு

 மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி

 புளித்த தயிர் - கால் கப்

 எலுமிச்சை - ஒன்று

 பட்டை, இலவங்கம், ஏலக்காய் - தலா இரண்டு 

நெய் - ஒரு தேக்கரண்டி 

உப்பு - தேவைக்கு ஏற்ப 

செய்முறை

அரிசியை சுத்தம் செய்து ஊற வைக்கவும் .

சோயாவை கொதிக்கும் நீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து எடுத்து குளிர்ந்த நீரில் அலசிக்கொள்ள வேண்டும் .

வெங்காயம், தக்காளியை நீளமாக நறுக்கவும் .

மிளகாயை கீறி வைக்கவும் .

இஞ்சி பூண்டை அரைத்து வைக்கவும்.

 புதினா, மல்லிகை ஆய்ந்து சுத்தம் செய்யவும் .

குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி கணிந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காயை தாளித்து பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும் .

பின் தக்காளி, சோயா , மிளகாய் தூள் சேர்த்து 3 நிமிடம் வதக்கி தயிர், எலுமிச்சை சாறு சேர்க்கவும் .

பின் ஊற வைத்து அரிசியை தண்ணீருடன் சேர்க்கவும்.

 தேவையான உப்பு சேர்த்து மூடி வெயிட் போடவும் .
ஒரு விசில் வந்ததும் தீயை குறைத்து பத்து நிமிடங்கள் வைத்து இறக்கி சூடாக பரிமாறவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)