தேவையானவை
ஊற வைத்து வேக வைத்து கொள்ளு - அரை கப்
கடுகு, சோம்பு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் நீளவாக்கில் கீறியது - மூணு
சௌசௌ, மஞ்சள் பூசணி தோல் சீவி சதுர தூண்டுகளாக நறுக்கியது - அரைக்கப்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு எண்ணெய் - தேவைக்கு
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை, சோம்பு, வெந்தயம், இஞ்சி பூண்டு விழுது, பெருங்காயத்தூள், கீறிய பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.
பின்னர் நறுக்கிய சௌசௌ சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
வெந்ததும் உப்பு பாேட்டு வேகவைத்துக் கொண்டு சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கவும்.