தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு - கால் கப்
முதல் தேங்காய்ப்பால் - ஒன்றரை கப்
இரண்டாம் தேங்காய் பால் - ஒன்றரை கப்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி நறுக்கியது - ஒரு துண்டு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
எலுமிச்சை பழச்சாறு - இரண்டு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
பூண்டு நறுக்கியது - ஆறு பல்
பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன்
தாளிக்க
பட்டை - ஒரு துண்டு
கருவேப்பிலை - சிறிது
எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்
செய்முறை
முதலில் பாசிப்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
பிறகு வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும் .
தேங்காய் பாலை சேர்த்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் விழுது, நறுக்கிய இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து கிளறி இறக்கவும் .
வெங்காயம் நன்கு வெந்ததும் முதல் தேங்காய் பால் சேர்த்து பட்டை, கருவேப்பிலையை தாளித்துக் கொட்டி இறக்கி எலுமிச்சை பழச்சாறு, கருவேப்பிலை சேர்க்கவும்.
சுவையான பாசிப்பருப்பு சொதி தயார்.