தேவையானவை
சேமியா - கால் கப்
தயிர் - ஒரு கப்
உப்பு - அரை ஸ்பூன்
நெய் - நான்கு ஸ்பூன்
முந்திரி - 15
கடுகு, உளுந்து, கடலை பருப்பு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன்
கரகரப்பாக பாெடித்த மிளகு, சீரகம் - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
இஞ்சி துருவல் - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - இரண்டு
கருவேப்பிலை - ஒரு துணுக்கு
நறுக்கிய கொத்தமல்லி தலை, கேரட் துருவல் - தலா ரெண்டு டீஸ்பூன்
செய்முறை
கடாயில் எண்ணெய், நெய்யை சூடாக்கி முந்திரியை வறுத்து எடுக்கவும்.
அதே எண்ணெயில் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு தாளித்து சேமியாவை வறுக்கவும்.
அதிலேயே ரவையை போட்டு வறுத்து அகலமான பேஷனில் போடவும்.
பின்னர் தாளிப்பு கலவை உப்பு, தயிர், இஞ்சி துருவல், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் , கருவேப்பிலை, கொத்தமல்லித்தழை, பெருங்காயத்தூள், மிளகு, சீரகப்பொடி, கேரட் துருவலை சேர்த்து நன்றாக கலந்து இரண்டு மணி நேரம் ஊற விடவும் .
பின்னர் இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.