தேவையான பொருட்கள்
இட்லி அரிசி - இரண்டு கிண்ணம்
அவல் - அரை கிண்ணம்
தேங்காய் துருவல் - ஒரு கிண்ணம்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
சர்க்கரை - அரை கரண்டி
செய்முறை
அரிசி, அவலை சுத்தமாக கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
இத்துடன் தேங்காய் துருவல், உப்பு, சர்க்கரை சேர்த்து நன்றாக அரைக்கவும்.
இரண்டு கிண்ணம் தண்ணீர் சேர்த்து கரைக்கவும் .
மாவை புளிக்க வைக்க வேண்டாம்.
சூடான வாணிலையில் ரவா தோசை ஊற்றுவது போல் தூக்கி ஊற்றவும்.
ஒரு பக்கம் மட்டுமே சுட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.