தேவையான பொருட்கள்
காளான் - 250 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
எண்ணெய் - இரண்டு மேசை கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசை கரண்டி
கறித்தூள் - ஒரு மெசேஜ் கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
கருவேப்பிலை - இரண்டு நீட்டு
உப்பு - இரண்டு தேக்கரண்டி
செய்முறை
காளானை வாணியில் குடிநீர் விட்டு பத்து நிமிடங்கள் முடி வைக்கவும்.
காளானை நன்றாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் .
வெங்காயம் ,தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணிலையை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் ,கருவேப்பிலையை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் மற்ற அனைத்து பொருட்களையும் போட்டு வதக்கவும்.
அதில் 25 மில்லி தண்ணீர் சேர்த்து நன்கு பிரட்டி விட்டு மூடி வைத்து வேக விடவும்.
எல்லாம் சேர்த்து நன்றாக வெந்ததும் திறந்து ஒரு முறை கிளறி விடவும்.
சுவையான கடாய் காளான் கறி ரெடி.