தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - அரை கப்
அரிசி மாவு - 2 கப்
நன்கு கனிந்த பூம் பழம் - 2
வெல்லம் - ரெண்டு கப்
தேங்காய் பல் சிறு துண்டுகளாக - இரண்டு டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் தூள் - ஒரு டீஸ்பூன்
நெய் - அரை கப்
எண்ணெய் - தேவைக்கேற்ப
ஆப்ப சோடா - 2 சிட்டிகை
செய்முறை
கோதுமை மாவு மற்றும் அரிசி மாவினை ஒன்றாக கலந்து கொள்ளுங்கள் .
பூம்பழத்தை துண்டுகளாக்கி மிக்ஸியில் அடித்து மாவுடன் சேருங்கள்.
தேங்காய் துண்டுகளை ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் சிவக்க வறுத்து சேருங்கள்.
வெல்லத்தை அரைக்க தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கரைந்து கொதித்ததும் வடிகட்டி சூடாக மாவில் ஊற்றுங்கள் .
அத்துடன் ஏலக்காய் தூள், ஆப்ப சோடா சேர்த்து நன்றாக கரையுங்கள்.
இது இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும் .
குழி பணியாரக் கல்லில் நெய், எண்ணெய் கலந்து ஊற்றி மாவு சிறிது ஊற்றி தீயில் நன்கு வந்ததும் எடுங்கள்.
மறுப்புரம் திருப்பி விட்டு வந்ததும் எடுத்து சூடாக பரிமாறுங்கள்.