தேவையானவை
பச்சை வேர்கடலை - இரண்டு கிண்ணம்
வெங்காயம் - 2
தக்காளி சாறு - மூணு தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கொத்தமல்லி தலை - சிறிதளவு
உப்பு, எண்ணை, தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
வேர்க்கடலையை குக்கரில் போட்டு தண்ணீர், உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் வெங்காயம், கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் .
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி போட்டு வதக்க வேண்டும் .
வெங்காயம் நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் அதனுடன் கொத்தமல்லி தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும் .
தேவையான அளவு உப்பு, தண்ணீர் வாசனை போகும் வரை கொதிக்க வேண்டும்.
குழம்பு கெட்டியான பதம் வந்தவுடன் கொத்தமல்லி தலையை தூவி இறக்கி பரிமாறினால் சுவையான குழம்பு தயார்.