தேவையானவை
பச்சை மொச்சை உரித்தது - 100 கிராம்
சாம்பார் பொடி - 4 டீஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம் - தலா அரை ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - ஒன்று
தேங்காய் பால் - ஒரு சிறிய கிண்ணம்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
புளியை 250 மில்லி தண்ணீரில் ஊற வைத்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.
பாசிப்பருப்பை குழைய வேக வைக்கவும்.
மொச்சையை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி கொள்ளவும் .
வதக்கிய மொச்சை, சாம்பார் பொடி, உப்பு ஆகியவற்றை புளி தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
வேகவைத்த பாசிப்பருப்பை இதனுடன் சேர்க்கவும் .
கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், காய்ந்தமிளகாய் தாளித்து கொட்டி இறக்கவும்.
கடைசியாக தேங்காய் பால் சேர்த்து கலக்கவும்.