தேவையானவை
காட்டுயானம் அரிசி மாவு -2 ஸ்பூன்
பூண்டு - ஒன்னு
தக்காளி - ஒன்னு
கேரட் - ஒண்ணு
பீன்ஸ் - மூணு
பெப்பர் பவுடர் - ஒரு டீஸ்பூன்
சீரகம் - சிறிதளவு
நெய் - ஒரு ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை
முதலில் காட்டுயான அரிசி மாவை சிறிது தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் தக்காளி, உரித்துப் பூண்டு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும் .
ஒரு வாணலியில் நெய் ஊற்றி சிறிது சீரகம் ,கருவேப்பிலை சேர்த்து அரை தக்காளி கலவையை சேர்த்து கேரட், பீன்ஸ் நறுக்கி அதில் சிறு தண்ணீர் விட்டு வேக விடவும்.
இப்போது கரைத்த காட்டுயானம் மாவை சேர்க்கவும் .
உப்பு, மிளகு தூள் சேர்த்து கிளறவும்.
கொதிக்க விட்டு இறக்கவும் சூடாக பரிமாறவும்.