சாமை வெள்ளரிக்காய் இட்லி திரும்ப பொறப்பாரா புரூஸ்லீ

kuttybabuPPT
0
சாமை வெள்ளரிக்காய் இட்லி

தேவையான பொருட்கள் 

சாமை அரிசி - 2 கப் 

உளுந்தம் பருப்பு - அரை கப்

 வெள்ளரிக்காய்  பொடியாக நறுக்கியது - 50 கிராம் 

வெந்தயம் - ஒரு டேபிள் ஸ்பூன்

 உப்பு - தேவைக்கேற்ப 

தண்ணீர் - தேவைக்கேற்ப

 செய்முறை 

ஒரு பாத்திரத்தில் அரிசி, உளுந்தம் பருப்பு, வெந்தயம் மூன்று முறை கழுவி ஐந்து மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
'
 தண்ணீரை நன்றாக வடிகட்டிய பிறகு மாவு அரைக்கும் இயந்திரத்தில் போட்டு மிருதுவாக அரைக்க வேண்டும்.

 பிறகு ஒரு பாத்திரத்தில் மாற்றி எட்டு மணி நேரம் பிறகு மாவு புளித்தவுடன் அதில் பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் கலந்து கொள்ள வேண்டும் .

உப்பு சரிபார்த்த பிறகு இட்லி தட்டில் நல்லெண்ணெய் தடவி இட்லியை வார்க்க வேண்டும்.
 சூடான சுவையான சாமை அரிசி இட்லி தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)