தேவையானவை
கேழ்வரகு மாவு - 100 கிராம்
மோர் மிளகாய் - மூணு
மாேர் சிறிது புளிப்பாக - 500 மில்லி
கடுகு, உளுந்தம் பருப்பு தலா - அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
எண்ணெய் - 6 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
மோருடன் உப்பு, கேழ்வரகு மாவு, சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்து மோர் மிளகாயை கிள்ளி போட்டு பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
கரைத்த மாவை இதில் ஊற்றி கூழ் பதமாக கிளறி இறக்கவும்.