தேவையானவை
வெள்ளை உளுந்து - ரெண்டு கப்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
பச்சை மிளகாய் - 3
கடலைப்பருப்பு, துவரம் பருப்பு - தலா இரண்டு ஸ்பூன்
அரிந்த முட்டைக்கோஸ் - கால் கப்
அரிந்த கேரட் - ரெண்டு டீஸ்பூன்
பொடியாக அரிந்த இஞ்சி - ஒரு டீஸ்பூன்
ஒன்று இரண்டாக பொடித்த மிளகு - ஒரு டீஸ்பூன்
அரிந்த கறிவேப்பிலை, மல்லித்தழை - தலா ஒரு டீஸ்பூன்
செய்முறை
மூன்று பருப்புகளையும் ஒரு மணி நேரம் ஊற விடவும்.
ஊறியதும் நீரை வடிகட்டி உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும் .
காய்கறிகளை இந்த மாவில் நன்றாக கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் மாவின் நடுவில் ஓட்டை போட்டு வடைகளாக தட்டி போட்டு வந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.