தேவையானவை
பெரிய நெல்லிக்காய் - ஆறு
துருவிய தேங்காய் - நான்கு டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
உதிர் உதிராக வடித்த சாதம் - ரெண்டு கப்
தாளிக்க
கடுகு - அரை டீஸ்பூன்
வரமிளகாய் - 2
பச்சை மிளகாய் - ஒன்று
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கருவேப்பிலை - ஒரு கொத்து
மல்லித்தழை - இரண்டு ஸ்பூன்
செய்முறை
நெல்லிக்காய் விதையை நீக்கி கேரட் துருவில் துருவிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து நெல்லிக்காயை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் .
தேங்காய் துருவலையும், உப்பையும் சேர்த்து வதக்கி இறக்கவும்.
சாதத்தை இதில் போட்டு நன்றாக கிளறி விடவும்.
மல்லி தலை தூவி அலங்கரிக்கவும்.
சத்துள்ள இந்த நெல்லிக்காய் பாத் எல்லா நாளும் சாப்பிட ஏற்றது.
பித்தம் நீக்கும் மருந்தாகவும் இருக்கிறது.