தேவையானவை
வெந்தயக்கீரை - மூன்று கட்டு
புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு
சாம்பார் பொடி - இரண்டு ஸ்பூன்
துவரம் பருப்பு - ஒரு கப்
கடுகு, வெந்தயம் தலா - அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
வெந்தயக் கீரையை ஆய்ந்து நன்கு அலசி எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும்.
துவரம் பருப்பை குழைய வேக வைக்கவும் .
புளியை 250 மில்லி தண்ணீர் விட்டு கரைத்து உப்பு, சாம்பார் பொடி, வதக்கிய வெந்தய கீரை சேர்த்து கொதிக்க விடவும்.
இதனுடன் வேகவைத்த பருப்பு சேர்த்து கடுகு, வெந்தயம் தாளித்து கொட்டி இறக்கவும்.