தேவையானவை
அரிசி மாவு - ஒரு கப்
இட்லி மிளகாய் பொடி, தேங்காய் துருவல் - தலா 4 டீஸ்பூன்
எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்
கருவேப்பிலை, உப்பு - சிறிது
செய்முறை
கடாயில் தண்ணீர் விட்டு எண்ணெய், உப்பு சேர்த்து கொதி வந்ததும் கருவேப்பிலையை கிள்ளி போடவும்.
தேங்காய் துருவல், இட்லி மிளகாய் பொடி, அரிசி மாவு தூவி கெட்டியாக கிளறி ஆறவிட்டு சிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைக்கவும்.