தேவையானவை
பச்சை மொச்சை உரித்தது - 100 கிராம்
சாம்பார் பொடி - 4 டீஸ்பூன்
பாசிப்பருப்பு - ஒரு கப்
புளி - எலுமிச்சை அளவு
கடுகு , உளுந்தம் பருப்பு, வெந்தயம் - தலா 1/2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - ஒன்று
தேங்காய் பால் - ஒரு சிறிய கிண்ணம்
எண்ணெய் , உப்பு - தேவையான அளவு
செய்முறை
புளியை 250 மில்லி தண்ணீரில் ஊற வைத்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.
பாசிப்பருப்பை குறைவாக வேக வைக்கவும்.
மொச்சையை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி கொள்ளவும்.
வதக்கிய மொச்சை , சாம்பார் பொடி, உப்பு ஆகியவற்றை புளி தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
வேகவைத்த பாசிப்பருப்பை இதனுடன் சேர்க்கவும்.
கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்து கொட்டி இறக்கவும்.
கடைசியாக தேங்காய் பால் சேர்த்து கலக்கவும்.