தேவையானவை
கேழ்வரகு - 200 கிராம்
சிவப்பு அரிசி - 100 கிராம்
தேங்காய் துருவல் - ஒரு கப்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
நறுக்கிய வாழைப்பழ துண்டுகள் - சிறிதளவு
வெல்லத்தூள் அல்லது சர்க்கரை - ஒரு கப்
நெய் - ஒரு டீஸ்பூன்
செய்முறை
கேழ்வரகு, சிவப்பு அரிசி இரண்டையும் சேர்த்து ரவை பதத்தில் பாெடித்துக் கொள்ளவும்.
தண்ணீரை லேசாக சூடாக்கி மாவில் தெளித்து விசிறி கொண்டு இட்லி தட்டின் மேல் ஒரு துணியை நினைத்து பொழிந்து போட்டு மாவை போட்டு மூடி வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
நன்கு வந்ததும் ஒரு தட்டில் கொட்டி உதிர்த்து நெய் தேங்காய் துருவல் நறுக்கிய பழ தூண்டுகள், வெல்லத்தூள் அல்லது சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும்.