சாதப் பொடி

kuttybabuPPT
0
செரிமானத்தை ஊக்குவிக்கிறது சாதப் பொடி 
  சற்று கசப்பு சுவைதான் எனினும் நெய்யோடு சேர்த்து உண்ணும்போது அதிகம் தெரியாது.

 பாகற்காய் போன்றே இருக்கும்.

 தேவைப்பட்டால் இங்கு குறிப்பிட்ட அளவிற்கு சற்று அதிகமாக பருப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

  கசப்பு தன்மை குறைக்க உதவும்.

 தேவையான பொருட்கள் 

சுண்டல் வத்தல் - 50 கிராம்

( பக்குவமான முறையில் செய்து செய்த வத்தல் பெற்றிட ) 

மிளகு தக்காளி வத்தல் - 25 கிராம்

 மணத்தக்காளி வத்தல் - 25 கிராம்

 உளுந்தம் பருப்பு - 50 கிராம்

 மோர் மிளகாய் அல்லது சிவப்பு மிளகாய் - மூன்று அல்லது நான்கு

 மிளகு - அரைத்  தேக்கரண்டி

 சீரகம் - ஒரு தேக்கரண்டி 

கருவேப்பிலை - ஒரு பிடி 

பெருங்காயம் - கால் தேக்கரண்டி

 உப்பு - சிறிது

 ஏற்கனவே வத்தலில் உப்பு சுவை இருப்பதால் குறைத்து சேர்க்கவும்.

 செய்முறை 

வாணலியை சூடு படுத்தி இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வத்தல் வகையை ஒவ்வொன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

 பிறகு அதே எண்ணெயில் மிளகாய், மிளகு, சீரகம் வறுக்கவும் .

இறுதியாக கருவேப்பிலை, உப்பு, பெருங்காயம் வறுத்தெடுக்கவும் .

ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து மென்மையான பொடியாக அரைத்துக்கொள்ளவும்.

 சூடான சாதத்தோடு நெய் சேர்த்து கலந்து சாப்பிடவும் .
ஆரோக்கியமாக வாழ்வு வாழ்ந்திடலாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)