ஜோவர் ஊத்தாப்பம்

kuttybabuPPT
0
ஜோவர் ஊத்தாப்பம்
தேவையானவை 

சோளம் - ஒரு கப் 

உளுந்தம் பருப்பு - கால் கப் 

வெந்தயம் - அரை தேக்கரண்டி

 கொத்தமல்லி இலைகள் - கைப்பிடி அளவு

 எண்ணெய் - தேவையான அளவு

 ஜவ்வரிசி - 4 தேக்கரண்டி 

கடுகு - ஒரு தேக்கரண்டி 

உளுந்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்

 காய்ந்த மிளகாய் - இரண்டு முதல் மூன்று (சிறிய துண்டுகளாக நறுக்கவும்)

 வெங்காயம் பொடி பொடியாக நறுக்கியது - ஒன்று 

உப்பு - சுவைக்கு ஏற்ப 

செய்முறை 

சோளம் மற்றும் பருப்பை நன்கு கழுவவும் .

உளுந்தம் பருப்புடன் வெந்தயத்தை சேர்த்து தனியாக நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும்.

 பருப்பு மற்றும் வெந்தய கலவையை சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மிருதுவான பஞ்சு போன்ற கூழ் போல் அறைத்து தனியே வைக்கவும் .

தண்ணீர் அதிகம் சேர்க்காமல் சிறிது சிறிதாக சேர்த்து ஜவ்வரிசியையும் மென்மையாக அரைக்கவும் .

பருப்பு கலவையில் ஜவ்வரிசி கலவையை சேர்த்து உப்பு கலந்து எட்டு மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊர விடவும் .

கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுந்தம் பருப்பு, மிளகாய், கருவேப்பிலை தாளித்து , வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும் .

இந்த கலவையை மாவில் சேர்த்து நன்கு கலக்கவும்.

 தோசை தவாவில் கெட்டியான ஊத்தாப்பம் போல் ஊற்றி எண்ணெய் சேர்த்து இரண்டு பக்கம் பொன்னிறமாகும் வரை சமைக்கவும்.
 சூடாக சட்னியுடன் பரிமாறவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)