தேவையானவை
புழுங்கல் அரிசி - ஒரு ஆளாக்கு
பச்சரிசி - ஒரு ஆளாக்கு
பச்சை பயறு - அறை ஆளாக்கு
உளுந்து - கால் ஆழாக்கு
வெந்தயம் - ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
செய்முறை
புழுங்கல் அரிசி, பச்சரிசி இரண்டையும் ஒன்றாக ஊற வைக்கவும்.
பச்சை பயரை தனியாகவும் , உளுந்து வெந்தயத்தை ஒன்றாகவும் ஊற வைக்கவும்.
அரிசிகளுடன் கருவேப்பிலை சேர்த்து ஒன்றாக மைய அரைக்கவும்.
பச்சை பயிரை தனியாக மைய அரைக்கவும்.
உளுந்து வெந்தயத்தை ஒன்று சேர்த்து பொங்க பொங்க அரைக்கவும்.
அனைத்தையும் உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.
மறுநாள் காலையில் இட்லியாக வார்த்தெடுக்கவும்.